என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மங்கோலியா தம்பதி பலி
நீங்கள் தேடியது "மங்கோலியா தம்பதி பலி"
மங்கோலியா நாட்டில் அணிலை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை கூடும் என்ற நம்பிக்கையில் அதனை உண்ட தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.#MongolianCoupleDead
உள்ளான்பத்தர்:
உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல் நலனில் ஆர்வம் காட்டும் நம்மில் பலர், தொடர்ந்து அந்த வழிமுறைகளை கடைப்பிடிப்பதும் கடினம் என்பதையும் மறுக்க முடியாது.
மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை உண்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது இருவருக்கும் பிளேக் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் இரண்டு தினங்களில் அந்த நபர் இறந்து விட்டார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MongolianCoupleDead
உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல் நலனில் ஆர்வம் காட்டும் நம்மில் பலர், தொடர்ந்து அந்த வழிமுறைகளை கடைப்பிடிப்பதும் கடினம் என்பதையும் மறுக்க முடியாது.
நம்முடன் பணிப்புரிபவர்கள், நமக்கு தெரிந்தவர்கள் உடல் நலனுக்கான மருத்துவம் சொல்லும் போது அதனை ஆர்வத்துடன் கேட்டறிந்து அதன்படி செய்ய முற்படுவோம். அதேபோல் மங்கோலியாவைச் சேர்ந்த தம்பதி உடல் நலனுக்காக ஒரு உணவை எடுத்துக் கொள்ளவே அது விபரீதத்தில் சென்று முடிந்தது.
மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல் பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. இந்நகரத்தில் வசிக்கும் தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை ஆகியவற்றை உண்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது இருவருக்கும் பிளேக் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் இரண்டு தினங்களில் அந்த நபர் இறந்து விட்டார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MongolianCoupleDead
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X